Tuesday, August 14, 2007

தனிமை..

தனிமை .. ஒரு வரம், ஒரு சாபம், ஒரு கொடுமை, ஒரு மென்மை, ஒரு இனிமை, ஒரு குற்றம், ஒரு திறமை, ஒரு தவம், ஒரு மேன்மை, ஒரு வறுமை, ஒரு செயல், ஒரு உண்மை, ஒரு கவிதை, ஒரு அருள், ஒரு ஆற்றல், ஒரு பாடல், ஒரு ஒழுக்கம், ஒரு அனுபவம், ஒரு ராகம், ஒரு குடும்பம். தனிமையில் இனிமை காண்பது அவரவர் மனதிலு வாழ்கையிலும்தான் அடங்கியுள்ளது. பலர் இந்த உலகில் தனிமைக்கு ஏங்குகிறார்கள் - அது சாபம். சிலருக்கு அது கிட்டுகிறது - அது வரம், ஆண்டவன் அருள். சிலருக்கு அதுவே ஒரு கொடுமை. சிலர் அதை ஒரு தவமாகவே செய்கின்றனர். அது அவர் செயல் ஒழுக்கத்தை உரசிப் பார்க்கும் ஓர் உரைகல். நண்பர்கள். பகைவர்கள், உறவினர், சுற்றத்தார் யாரும் இல்லா ஒரு வறுமை சூழலை ஏற்படுத்தும் தனிமை. தனிமையை ஒரு கவிதையாக்கி, ராகமாக்கி, பாடலாக்கி பாடுபவர்களும் உண்டு. அதுவே அவர்களின் ஆற்றல். ஒரு குடும்பம் தனிமை படுத்தப்பட்டால் அது ஒரு குற்றம். அது அவர்களுக்கு விதித்த அல்லது அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒரு செயல். தனிமை நமக்கு நாமே பேசக் கற்று கொடுக்கிறது. ஆண்டவனிடன் நெருக்கமாக பேச செய்கிறது. நம்மை நமக்கு அடையாளம் காட்டுவது தனிமை. தனிமை ஒரு மென்மையான அனுபவம். அதை ரசிக்க ருசிக்க கற்றுக் கொள்வது கொஞ்சம் கடினமே. கவிஞன் கவிதை வடிப்பதும் தனிமையில்தான். கட்டுரையாளன் கட்டுரை வரைவதும் தனிமையில்தான் ஓவியன் வண்ணம் தீட்டுவதும் தனிமையில்தான். இன்றைய உலகச் சூழலில் தனிமை ஓர் அருமருந்து. அதை உணவாக்க முடியாது. நம் வாழ்வை மேன்மை பெற தனிமையில் நம்மை ஊக்க படுத்திக் கொள்ளலாம். உடல் மற்றும் மன ரீதியாக பல மற்றங்களை கொண்டு வரும் தனிமை. மனம் விட்டு மற்றவறோடு பேசும்போது தனிமையை தனிமை படுத்துகிறோம். தனிமையிலேயே உழலாமல் தனித்தன்மையோடு வாழ்வின் வளமையை உணர்ந்து உலகை வென்று உன்னதம் காண்போம் இறைவன் துணையுடன் நம் உள்ளத்துணிவுடன்.

No comments:

 
software software