Wednesday, June 20, 2007

கனவுகள்..

கனவுகள் துரத்தும் காலம் கரையும்
விலையாய் கொடுத்து அது விரையும்
கண்ணில் காண்பது மட்டுமா கனவு?
கருத்தில் இருப்பதும்தான் கனவு.

கட்டுப்பாடில்லாமல் கட்டுக்குள் வர மறுக்கிறது
பிடி கொடுக்காமல் அது படை எடுக்கிறது
எடுத்த வேகத்தில் அடுத்த அடி வைக்கிறது
வீசும் காற்றை விட அது வீரு நடை போடுகிறது

விருப்பம் கேட்காமல் மன வீட்டில் அடைகிறது
சில நேரம் விரும்பி அழைத்தாலும் வீம்பு பிடிக்கிறது
பகுதி நேரத் தொழிலாய் பார்த்து செல்கிறது
பழுதில்லாமல் அதன் பயணம் தொடர்கிறது

நெஞ்சில் ஊஞ்சல் ஆடி நெருக்கடி தருகிறது
நேரம் ஏது காலம் ஏது நேரில் வருவதற்கு
கண்ணின் உறக்கத்தை களவாடுகிறது
கருமம் செய்ததால்தான் வருகிறதா?

கண்ணுக்குள் இருந்து கருவிழியை உருவுகிறது
மண்டைக்குள் மலையாக
மனதிற்குள் பாரமாக கரைய மறுக்கிறது
மறுத்தால் அறைந்து நொருக்குகிறது

கனவுக்கு யார் உணவு போடுகிறார்கள்?
நிலவு கரைந்து வளர்வது போல
கனவும் கலைந்து மலர்கிறது.
நல்ல, கொட்ட என கனவுகளில் விதை தூவுவது யார்?

கனவு காட்சிகாட்டி காயபடுதுகிறது.
நினைவு நெருப்பூட்டி நோகடிக்கிறது.
நிலவின் ஒளி நிலையானதல்ல
கனவின் காட்சியும் நிலையானதல்ல

தலையின் மூலையில் உதிக்கும் ஒரு எண்ணகீற்று
உருவம் தந்து ஓட்டம் தந்து நம்மை ஆட்ட பார்க்கிறது.
நினைவின் எதிரொலியாய்
கனவு கண்ணுக்குள் வருகிறது

பகலை பார்த்து பயம் அதற்கு
இரவின் இருளில் நிறம் எதற்கு?
கனவின் சூட்டால்
இமை மயிர் கருகும்

கனவுக் காளையை இருளில்
இட்டுச் செல்லாமல் எதிர்கால
ஒளி நோக்கி
திருப்பி விட வேண்டும்

சில கனவுகள் மறதியை
மறுத்து மனதில் பதிந்து விடும்
அதை விடுவிக்க முடியாமல்
விரக்தியில் விழி இமைகள் நனைந்து விடும்.

கருமம் பிடித்த கனவுகளுக்கு
கதவுகள் போட்டு தாழிடவும்
நல்ல விதைகளை நினைவில் தூவினால்
பல நல்ல கனவுப் பயிர் விளையும்
விளை நிலமும் நல்ல விளைச்சல் எடுத்து தரும்
விருந்தும் சுவைக்க விருப்பம் வரும்.

நல்ல கனவை கலைக்க குலைக்க
கடுங் கோபம் கொண்ட காரியம் நடந்தாலும்
கட்டு குலையாமல் தொடர வேண்டும்.
கனவுக் கோலத்தை
மழை மேகம் கொண்டு அழிக்கவும்
பிழை என்று துடைக்கவும்
பலரும் பலவாறு முனைவர்

பாவி என்றும்
பாதகம் இழைத்தேனா என்றும்
இடிவிழுந்தார்போல் இடிந்து உட்காராமல்
மலையென வளர்ந்து
முகிலை முகர வேண்டும்

பூவுக்குள் பூகம்மே வந்தாலும்
வாசம் வீசும் வேலைக்கு விடுமுறை கிடையாது
பூத்து, காய்த்து, கனிந்து வரும் வரை
காத்து கடமை செய்ய வேண்டும்

மனக் கோட்டை மலைகோட்டையாய்
உறுதியுடன் உயர்வு பெற
உண்மையான கனவு காண
கடவுள் துணை வேண்டும்

இடர் கொடுக்கும் இடுக்கண் களைந்து
மிடுக்குடன் கனவை மெய்பிக்க வேண்டும்.

அதை பழித்தவரும் பிழைக்கட்டும்
பிறகு இருந்து பார்க்கட்டும்
பிழை அல்ல நிறை என்று காணட்டும்
கண்டு மகிழட்டும்.
நம்மை வீழ்த்த விரும்புவர்
விருப்பம் என்றைக்கும்
நிறைவேறாது போகட்டும்.
காற்றில் பறக்கும் காற்றாடியாய்
சுற்றி கரைந்து போகட்டும்.

விதை தூவும் வேலையை
விரைந்து முடிக்க வேண்டும்
ஆனால் அதற்கு முடிவேது?
வேலை தொடர்ந்தால்தான்
வேளை ஒன்றுண்டு
நாளை நமக்குண்டு

சிரமம் இல்லாமல்
சிரம் ஏற்று உரம் போட்டு
மெறுக்கேற்றி உயிர்பிக்க வேண்டும்
உயர்ந்து உளம் வாழ்த்த வேண்டும்.

வற்றாத அருவி போல்
வழி தேடி கரை காண்போம்
குறை களைவோர் குணம் அதுதான்
குற்றம் சொல்லாமல் தினம்
வளர்ந்து நமை உணர்ந்து
நன்மை செய்வோம்.

கருவறை ஒரு திரை விலகும் வரை
வைராக்கியம் காத்து காண்போம் தரிசனம்
கருவில் கிடந்த பத்து மாதத்தில்
கற்பனை கனவு வளர்த்தோம்
பயணம் தொடர்ந்து
கட்டிலில் கிடத்தி
காவியம் பாடி
பெயர் சூட்டி
தரையில் வளர்ந்து
தவழ்ந்து நடந்து
கனவுக்கு உருவம்
கொடுக்க முனைந்து
தெரியாமல் காளை பருவம் அடைந்து
புதுக் கற்பனை
புதுக் கனவு
புதுக் கவிதை தோன்றி
புது யுகம் படைக்க
இது நேரம் என கணக்கு பாராமல்
காகிதம் கிறுக்கி தொடரும் பயணம்
பெற்றோர் பிள்ளைகள் தம் மனைவியோடு
சொந்த பந்தம் படை சூழ
இயற்கை இறைவர் இசைந்து
கனவுக் கடலில் நீந்தி
முத்தெடுத்து கரை சேர்வோம்.

Friday, June 15, 2007

தமிழில் தட்டெச்சு செய்ய..

http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

and

http://www.google.com/transliterate/indic/Tamil#

and

http://www.suratha.com/reader.htm
First type and click Romanised..

and
http://www.pdstext.com/

and
http://service.monusoft.com/TamilTypePad.htm


and

http://www.iit.edu/~laksvij/language/tamil.html
In this website you can even download the script and type it when you are offline also..

and

Online Keyboard on this website
It seems to be similar to tamilzhnet99 strokes..



and

http://www.lexilogos.com/keyboard/tamil.htm


http://ezilnila.com/nila/unicode_writer.htm

இங்க சொடக்கி பாருங்க தமிழில் தட்டெச்சு பற்றி நிறைய சொல்லி இருக்காங்க..
http://buhari.googlepages.com/anbudan.html##unithamil

Thursday, June 14, 2007

காலை வேளை..

காலைக் கதிரவன் கண்விழிக்க
பனிப் பெய்யும் இளங்காலை வேளை
சுகம் கூடும் சோம்பிப் படுத்தால்
காலத்திற்கு கருணை இல்லை
நிற்காமல் ஓடுவதே அதன் வேலை
மேனியில் படும் குளிர்காற்று
போர்வைக்குள் போகும் புகலிடம் கேட்டு
சூடே சுகமென்று சுருதி போடும் நெஞ்சம்
படுக்கையே பெரும்பாலும் தஞ்சம்
வெளிச்ச வெப்பம் வீட்டினுள்
வரவில்லை என்று
படுக்கை இழுத்தது
உடல் படுக்க துடித்தது
முதல் அடி எடுக்க முனகும் மனம்
முயன்று பார்க்க முயலும் குணம்.

கடினப் பிரயாசை
கட்டிலை விடுத்து
போர்வையை விலக்கி
உடலைத் தாங்கி
ஓட வேண்டும் குளியல் அறை
விளக்கை விடியலாக்கி
தண்ணீரை வெந்நீர் ஆக்க
எரிந்தது சிவப்பு விளக்கு
குளியலறையிலும் குளிர்
குடி கொண்டிருந்தது.

கொண்டையை திருகினால்
குழாயிலிருந்து குபுக்கென்று
கொட்டும் குளிர் நீர்
அந்த நீர்த் துளிகள்
தெரிப்பதே ஓர் அழகு
பல் துலக்கும் சாதனம்
பற்பசை அதன் தலையில் இட்டு
வென்பற்களில் தேய்த்து
நுரை தள்ள உமிழ்ந்து
வாய் கொப்பளித்து
கண்ணாடி பார்த்து
முகமுடி சரிசெய்து
ஆடை களைந்து
அகம் துலக்க
தண்ணீர் திறந்து
அது வெந்நீர் ஆகும் வரை
வேடிக்கைப் பார்த்து
விளங்கும் புதிர் தெரியாமல்
வெளிச்சம் பார்த்து
வெந்நீர் தேகம் தொடும் வரை
கால விரயம் ஆகியது
வெந்நீர் வேகமாய்
மேனியில் பரவ
தேகம் சூடேற
சூட்டின் சுகத்தில்
குளிர் மறந்து போனது
வெந்நீரின் வெப்பம் தேகத்தின்
ஒவ்வொரு பாகத்திலும்
படிந்து போனது
கடிகாரம் காலத்தைக் காட்ட
நினைவில் ஓர் சினுங்கல்
துண்டால் உடலை சுருட்ட
ஒத்தி எடுக்க
உடல் மேல் இருந்த
நீர் கொப்பளங்கள் மறைந்தன
சமுதாயத்தை சந்திக்க
சீருடை வேண்டாம்
ஆனால் ஓருடை வேண்டும்
நாடறியும் நாகரீகம்
நாம் அணியும் உடையில் உள்ளது
துவைத்த உடையில்
தண்ணீர் பிழிய
சுருக்கம் வரும்
உலரும்போது சூடு போட்டு
சுருக்கம் தவிர்த்து
சுருங்கிய ஆடை பார்த்தால்
பலர் முகம் சுருங்கும்
மானம் காக்கும் ஆடை கண்டு
மரியாதை செய்யும்
மனிதர் பலருண்டு
மேடை ஏறும் நிலை
வேடம் போட என்ன பிழை
உடலும் மனமும்
ஒருங்கே உழைத்தால்
உயர்வு என்றும்
நம் உடன் உண்டு
உயரும் வழிஉண்டு
இறைவன் துணையோடு
நம்பிக்கை நம் செயலோடு

Wednesday, June 13, 2007

பெற்றோர்

தாய் - தன்னை கொடுத்து உன்னை தந்தாள்
தந்தை - தன்னை வருத்தி உன்னை வளர்த்தார்

தாய் மனம் மகிழ்ந்தால் தரணி தழைக்கும்
ஆண்டவனால் அனுப்பப்பட்டவர்கள்
அம்மாவும், அப்பாவும்.

வலி பொறுத்தாள்
வாழ்க்கை கொடுத்தாள்
அன்பை ஊட்டி அகிலத்தை காட்டினாள்
உதிரம் கரைத்து உணவு கொடுத்தாள்
நாவின் சுவையை நாளும் வளர்த்தாள்
அவன் உறங்க இவள் விழித்திருந்தாள்
அவன் விழிக்க இவள் காத்திருந்தாள்
அவன் அழுதால் இவள் ஆசுவாசபடுத்தினாள்
அவன் வளர்ந்தான் இவள் மகிழ்ந்தாள்

அவன் உல்லாசித்தான் இவர் உழைத்தார்
எழுதப் படித்தான் எழுச்சி கொடுத்தார்
பள்ளி செல்ல பழக்கிக் கொடுத்தார்
வேகம் என்றான் விவேகம் சொன்னார்
ஆட்டம் போட்டான் அளவு என்றார்
அவன் செலவழித்தான் இவர் பணத்தை
அவன் படிக்க இவர் கடன் வாங்கினார்

அவன் வளமை இவர்கள் பெருமை
அவன் உயர்வு இவர்கள் சிறப்பு

அவன் மகிழ்ச்சி இவர்கள் ஆனந்தம்
அவன் தடம் மாறினால் இவர்கள் தடுமாறினார்கள்
அவன் துள்ளி குதித்தால் இவர்கள் அள்ளி எடுத்தார்கள்
அவன் பறந்து வந்தால் இவர்கள் பார்த்து பரவசப்பட்டார்கள்
அவன் பட்டம் வென்றால் இவர்கள் கொண்டடினார்கள்
அவன் சிரிப்பு இவர்கள் சிலிர்ப்பு

இவர்கள் அன்பின் வெள்ளம் அணையின்றி ஓடியது
அந்த ஊற்றுக்கு என்றுமே
வறட்சி இல்லை
முடிவில்லை
அழிவில்லை
நஞ்சில்லை
அயர்வில்லை
பலன் கருதா அன்பு
பரிவோடு காட்டும் அன்பு
முடிவில்லா அன்பு
முழுதும் கிடைக்கும் அன்பு

 
software software