Wednesday, August 15, 2007

பாரதத் தாய்

பாதம் பணிந்தவர் பயனுற்றனர்
வாதம் செய்தவர் பிரிவுற்றனர்.
பாவம் என்றெண்ணியவர் பிரம்மிப்படைந்தனர்
கோபம் கொண்டவர் மோசம் போயினர்.

விலங்கு கைகளை இறுக்க
உரிமை அதனை உடைக்க
கொட்டும் குருதியில் குளித்து
வாழும் உயிர்களை ஏப்பம் விட்டு
வாங்கிய சுதந்திரம்
வாழ்கை என்றும் மறவாது
உன் மந்திரம்

சுரண்டும் சுப்பன்கள்
சுகமாய் இருந்தாலும்
சுரக்கும் உன் கருணை
சுத்தமானதுதான்.

எத்தனை உறிஞ்சினாலும்
ஊரும் நீரூற்று உந்தனுடையது
ஜாதி நோய் கொண்டு
பாதி உயிர் போயினும்
சாதித்து நின்றாய் நீ
கொலை வெறி தீவிரவாதியும்
உன்னை கீரி கொப்பளிக்கும்
ரத்தம் கண்டு குதூகலித்தாலும்
குணத்துடன் உன் சோகம் மறைத்தாய்
கூடி நின்று அமைதி காத்தாய்

ஒன்றாய் இருப்பதை கண்டு
மனம் வேகும் மாந்தர் தம்மை
வேரோடு மாற்றுவோம்.
இவள் ஒன்று பட்ட
சக்தியை கூட்டுவோம்.

மனித வளத்தின்
மகிமையை
அவனி அறிய
வைத்தாய் நீ
வானம் வளர
வாழ வைத்தாய் நீ
மானம் ஊட்டி
கானம் பாடி
நாளும் நன்மை செய்து
வாழும் மனிதரை கொண்டாய் நீ.

அறிவியல் அதிசயமும்
புவியியல் பூகம்பமும்
நடப்பது உன்னில்தான்.
ஆழிப்பேரலையும் உன்னை
தோழி போல் முத்தமிட்டு
பல உயிர்களை
புசித்து ருசித்தது
உன்னிடத்தில்.

யாருக்கும் இல்லை
என்று சொல்லும்
மனம் இல்லாமல்
அனைவருக்கும்
கிள்ளி கொடுக்காமல்
அள்ளி கொடுப்பவள் நீ
அதையும் சொல்லி
கொடுப்பவள் நீ.
விதையை விருட்சம்
ஆக்குபவளும் நீயே.

தவசீலர்கள் உன்னில் ஜெனித்து
சமுதாய மாற்றம் கண்டு
உள்ள ஏற்றம் கொண்டு
வாழ்வாங்கு வாழ வாழ்த்துவாய்
நீயும் வாழுவாய்.

நிலம் கொண்டு
நீர் கொண்டு
வளம் கொண்டு
பயிர் கொண்டு
வனம் கொண்டு
மனம் கொண்டு
குணம் கொண்டு
செல்வம் கொண்டு
எழில் கொண்ட
எங்கள் தாயே
எங்களை வாழ வைத்தாயே
எங்களை இந்தியர்
என்று சொல்லி
பெருமை பட வைத்தாயே
உன் அடி பணிந்து
உயருவோம் என்றும்.

No comments:

 
software software