Tuesday, September 14, 2010

உயிரின் செறுக்கு

சலனமில்லா சடலம்
பாதை தெரிந்த பயணம்
கிறக்கம் தரும் மயக்கம்
கிறங்க வைத்து உருக்கும்
சதையை கொஞ்சம் கிழிக்கும்
தனக்குள் இருந்து சிரிக்கும்
தானே மேல் என நினைக்கும்
எமனை காதலிக்கும்
விழியில் வழியும் நீராகும்
வலியில் பயிராகும்
வலிப்பதால் அது உயிராகும்.

Monday, September 13, 2010

ஒரு ஆட்டின் கதை

பாசம் காட்டினர்
பரிவு ஊட்டினர்
மாலை மாட்டினர்
உயிரை எடுத்தனர்..

இலை தழை கொடுத்து கழுத்தருகில் தடவினார்
புல் கட்டை கீழே போட்டதால் குனிந்தேன்
நான் உண்ட புல் என் குடலுக்கு போகும் முன்
என் ஜீவன் என்னிடம் இல்லை..

 
software software