Thursday, October 20, 2011

வாழும் மனிதர்கள்

தேதி பார்த்து வேலை செய்து
நாதியற்று போகும் வேளையிலும்
வேலை செய்யும் மனிதர்கள்.

நாளை என்று எதுவும் இல்லை
இன்றுதான் எல்லாம் என்று இருக்க தெரியாமல்
வேளைக்கு கவலையில் மூழ்கும் மனிதர்கள்.

கோபம் தினம் கொண்டு
கோவிலில் குடியிருக்கும் தெய்வத்தை காண
வாழ வேண்டி வரிசையில் நிற்கும் மனிதர்கள்.

Tuesday, October 11, 2011

வெள்ளை இரவு.!

இருப்பதும் மறிப்பதும் இறைவன் செயல் என்று இருந்துவிடாமல்
இருக்கும் வரை உழைக்கும் எண்ணம் வேண்டும்
தேடும் தாகம் இருக்கும் வரை
ஓடும் தூரம் அதிகம் தான்!

ஊற்றின் ஆழம் தெரியாது
வாழும் வரை வாழ விடு
கண்மூடி இருக்கும் கரும் இரவை
விழி திறந்து மற்றுவோம்
வெள்ளை இரவாக.!

Sunday, October 2, 2011

ஒளிந்திருக்கும் கடவுள்

நான் நீ என்றில்லை
மேல் கீழ் என்றில்லை
உயர்வு தாழ்வு என்றில்லை
குளிர்ச்சி வெப்பம் என்றில்லை
காதல் காமம் என்றில்லை
நட்பு பகைமை என்றில்லை
எல்லாம் ஒன்றாகி உலகறியா ஒளிந்திருக்கும் கடவுளே
உன்னை வணங்குகிறேன்.

 
software software