Friday, April 25, 2008

குறை ஏதுமில்லை..

உதிக்கும் கதிரின் வெளிச்சத்தில் குறை ஏதுமில்லை
சுரக்கும் நீரூற்றின் சுவையில் குறை ஏதுமில்லை
வீசும் காற்றின் வேகத்தில் குறை ஏதுமில்லை
பூக்கும் பூவின் இதழில் குறை ஏதுமில்லை
பூமி சுழலும் முறையில் குறை ஏதுமில்லை
குளிர் நிலவின் ஒளியில் குறை ஏதுமில்லை
வளரும் பயிரின் தோற்றத்தில் குறை ஏதுமில்லை
பறக்கும் பறவையின் ஆற்றலில் குறை ஏதுமில்லை
நெளியும் புழுவின் வாழ்வில் குறை ஏதுமில்லை
நீந்தும் மீனின் ஓட்டத்தில் குறை ஏதுமில்லை
கடல் அலையின் சீற்றத்தில் குறை ஏதுமில்லை
மலை பாறை உறுதியில் குறை ஏதுமில்லை
இருக்கும் மண்ணின் வளத்தில் குறை ஏதுமில்லை
பெய்யும் மழையின் ஈரத்தில் குறை ஏதுமில்லை
மாறும் பருவ நிலையில் குறை ஏதுமில்லை
சீறும் சிங்கத் தோற்றத்தில் குறை ஏதுமில்லை
பதுங்கி பாயும் புலியிடம் குறை ஏதுமில்லை
நீர் தேடும் மரவேர்களில் குறை ஏதுமில்லை
வளைந்து படரும் கொடியில் குறை ஏதுமில்லை
பாய்ந்து ஓடும் ஆற்றில் குறை ஏதுமில்லை
துள்ளித் திரியும் மானிடம் குறை ஏதுமில்லை
கானம் பாடும் குயிலிடம் குறை ஏதுமில்லை
பார்த்து படைத்த மனித மனதில்தான்
என்ன குறை என்று இறைவனுக்கு விளங்கவில்லை.

 
software software