"பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க" என்று நம் மரபில் பெரியோர்கள் வாழ்த்தி வருகிறார்கள். இது பற்றிக் கூறும் பாடலைப் பற்றி தமிழ் அறிஞர் ஹரிகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டேன். அவர் தந்த அந்தப் பாடலும், விளக்கமும் இதோ -.. அது அபிராமி அம்மை பதிகத்தின் முதல் பாடல். அபிராமி அம்மை பதிகத்தின் பதினோரு பாடல்களும் இங்கே கிடைக்கின்றன
:http://www.tamil.net/projectmadurai/pub/pm0026/abipatsc.html
கலையாத கல்வியும் குறையாத வயதுமோர் கவடுவா ராத நட்பும்
.....கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணிஇ லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனைவியும் தவறாதசந் தானமும்
.....தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள்வா ராதகொடையும்
தொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு துன்பமில் லாத வாழ்வும்
.....துய்யநின் பாதத்தில் அன்பும்உதவிப் பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலும் மாயனது தங்கையே ஆதிகட வூரின் வாழ்வே
....அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி அருள்வாமி அபிராமியே!
பொருள் : கல்வி, நீண்ட ஆயுள், கபடில்லாத நட்பு, நிறைந்த செல்வம், எப்போதும் இளமை, பிணி இல்லாத ஆரோக்கியமான உடல், சலிப்பு வராத மனம், அன்பு நீங்காத மனைவி, புத்திர பாக்கியம், குறையாத புகழ், சொன்ன சொல் தவறாமல் இருப்பதற்கான அருகதை, எந்தத் தடையும் ஏற்படாத கொடை(அளித்தல்), செங்கோல் வளையாமல் பரிபாலிக்கும் அரசன், துன்பமில்லாத வாழ்வு, உன் பாதத்தின்மேல் பக்தி, இந்தப் பதினாறுக்கும் அப்பால் உன் தொண்டர்களை என்றும் பிரியாத கூட்டு. இவற்றை அருள வேண்டும்.
Saturday, July 28, 2007
பதினாறு பேறுகள் பற்றிய அழகிய பாடல்..
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Saturday, July 28, 2007
Labels: spritual
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பதிவு...
இதுவரை இந்த விளக்கத்தை நான் கேட்டதில்லை..
ரொம்ப நல்ல பதிவு
நண்றிகள்
Post a Comment