Monday, July 23, 2007

கடவுளின் கர்வம் - இயற்கை..

கால் போன போக்கில்
சுழலும் சக்கரம்
காலம் அதன் மந்திரம்
தடம் மாறாமல்
தடம் கொண்டு
ஓடிக் கொண்டிருக்கும்
நிற்காமல் அளவில்லா எல்லை
தடுப்புச் சுவரில்லை
காவல் காக்கும் வேலை இல்லை
எண்ணிலடங்கா கோள் குடும்பங்கள்
ஒளி உமிழும் வின்மீன்கள்
ஒவ்வொரு கூட்டுக் குடும்பமும்
தனிக்குடித்தனம் செய்கின்றன.

நெருப்பு பந்தை
உருளச் செய்தான்
அதன் ஒளியை
பிரபஞ்சத்தில்
படரவிட்டான்
உருவம் இல்லை
உள்ளம் இல்லை
உறக்கம் இல்லை
உடுப்பும் இல்லை

சதையுடன் எலும்புடன்
செந்நிற குருதி கலந்து
சிலவற்றை ஊரவிட்டான்
சிலவற்றை பறக்கவிட்டான்
சிலவற்றை நடக்கவிட்டான்
சிலவற்றை நீந்தவிட்டான்

ஆதியும் இன்றி
அந்தமும் இன்றி
அலைவான் அவன்
உழைக்க வேண்டாம்
ஊதியம் வேண்டான்
ஆனால் பிழைக்க தெரியும்
ஆக்க தெரியும்
காக்க தெரியும்
அழிக்கவும் தெரியும்
நீர் வைத்து
நிலமும் வைத்து
அதில் வான் வைத்து
வலியும் வைத்தான்

காற்று தந்து
தூசும் தந்து
மாசில்லா மரமும் தந்து
மண்ணை படைத்து
பொன்னைப் படைத்து
மனமும் வைத்தான்
மனதில் ஆசை வைத்தான்
பாசம் வைத்தான்
வேஷம் வைத்தான்
மகிழ்ச்சி வைத்தான்
சூழ்ச்சி வைத்தான்
அத்தனைக்கும்
அளவை வைக்க மறந்தான்
இயற்கை அழகை படைத்தான்
ரசனை உணர்வுடன்
ரசிக்க சொன்னான்.

உணவை வைத்து
அதில் சுவையை கலந்து
புசிக்க சொன்னான்
வாழ்கை தந்து
வாழச் சொன்னான்
அதில் பாடம் கற்று
படிக்கச் சொன்னான்
பழகச் சொன்னான்
மொழி வைத்து
நிறம் வைத்து
மனம் வைத்து
மக்களை பிரித்தான்
ஆட்டம் தொடங்கி
நோட்டம் பார்த்தான்
ஆட்டம் போட்டவனை
அடங்க செய்தான்
பாசம் கொடுத்து
பிரிவைக் கொடுத்தான்
பண்பைச் சொல்லி
அன்பை தந்தான்

கஷ்டம் கொடுத்து
கருணைக் காட்டினான்
ஆயிரம் கை உண்டு
கோடி வேலை உண்டு
பாயிரம் பாட வைப்பான்
பக்தர்கள் வேண்டி நிற்பர்
பாமரர் பாடி தொழுவர்
வற்றாத அருள் உண்டு
குறையாத பொருள் உண்டு
குன்றாத குணம் உண்டு
மங்காத மனம் உண்டு
மாயம் பல உண்டு
மெய் என்பான்
பொய் உரையான்
வையகம் வாழ வைத்து
வாழ்ந்து வாழ்த்துவான்.

No comments:

 
software software