Wednesday, June 13, 2007

பெற்றோர்

தாய் - தன்னை கொடுத்து உன்னை தந்தாள்
தந்தை - தன்னை வருத்தி உன்னை வளர்த்தார்

தாய் மனம் மகிழ்ந்தால் தரணி தழைக்கும்
ஆண்டவனால் அனுப்பப்பட்டவர்கள்
அம்மாவும், அப்பாவும்.

வலி பொறுத்தாள்
வாழ்க்கை கொடுத்தாள்
அன்பை ஊட்டி அகிலத்தை காட்டினாள்
உதிரம் கரைத்து உணவு கொடுத்தாள்
நாவின் சுவையை நாளும் வளர்த்தாள்
அவன் உறங்க இவள் விழித்திருந்தாள்
அவன் விழிக்க இவள் காத்திருந்தாள்
அவன் அழுதால் இவள் ஆசுவாசபடுத்தினாள்
அவன் வளர்ந்தான் இவள் மகிழ்ந்தாள்

அவன் உல்லாசித்தான் இவர் உழைத்தார்
எழுதப் படித்தான் எழுச்சி கொடுத்தார்
பள்ளி செல்ல பழக்கிக் கொடுத்தார்
வேகம் என்றான் விவேகம் சொன்னார்
ஆட்டம் போட்டான் அளவு என்றார்
அவன் செலவழித்தான் இவர் பணத்தை
அவன் படிக்க இவர் கடன் வாங்கினார்

அவன் வளமை இவர்கள் பெருமை
அவன் உயர்வு இவர்கள் சிறப்பு

அவன் மகிழ்ச்சி இவர்கள் ஆனந்தம்
அவன் தடம் மாறினால் இவர்கள் தடுமாறினார்கள்
அவன் துள்ளி குதித்தால் இவர்கள் அள்ளி எடுத்தார்கள்
அவன் பறந்து வந்தால் இவர்கள் பார்த்து பரவசப்பட்டார்கள்
அவன் பட்டம் வென்றால் இவர்கள் கொண்டடினார்கள்
அவன் சிரிப்பு இவர்கள் சிலிர்ப்பு

இவர்கள் அன்பின் வெள்ளம் அணையின்றி ஓடியது
அந்த ஊற்றுக்கு என்றுமே
வறட்சி இல்லை
முடிவில்லை
அழிவில்லை
நஞ்சில்லை
அயர்வில்லை
பலன் கருதா அன்பு
பரிவோடு காட்டும் அன்பு
முடிவில்லா அன்பு
முழுதும் கிடைக்கும் அன்பு

No comments:

 
software software