Wednesday, September 19, 2007

பிரிவின் செயல்..

தூக்கம் தொலைந்தது
தொண்டை வறண்டது
சொல்லும் சொல்
மறந்து போனது
இமை மறுத்த தூக்கம்
விரட்டியது யாரோ?
விடை தேடி விரைகின்றேன்
திசை தெரியாமல்.
மனதின் விஷம்
செயலில் கொடுமை
சொல்லில் கடுமை
செவியில் விழும்
அள்ள கைகள் இல்லை
அடைக்க பைகள் இல்லை
பயணம் முழுதும் பாரம்
நிழல் கிடைத்தால் இளைபாரும்
அந்த நிழலைத்தான் கண்கள் தேடும்
எந்த குழலும் கானம் பாடும்.
அது இந்த செவி
மடலில் சிதறிச் செல்லும்.
சுவாசிக்கும் காற்று
சுகமாய் தோன்றும்
உள்ளிழுத்த காற்று
குளிர்ந்து இருந்தது
வெளியிட்டது சூடாய் இருந்தது.
என் மனம் வழி வந்ததாலா?
பிரிவு மட்டும் அடிக்கடி
ஏன் வருகிறது.
பிரிவதால் என்ன பயன்?
உயிரற்ற உடலாய்
உலவவிட்டு உருகும்
உயிரை மறக்க வைக்கிறது
இதற்கும் விதியின் மீது
பழி போட விருப்பமில்லை.
என் மதியை நினைத்து
நானே நொந்து கொண்டேன்.
விழியில் சிறை வைத்தேன் உன்னை
கனவில் மட்டும் சிறை திறக்கிறாய்
இமை திறந்தால் நீ மறைகிறாய்.
உன்னிடம் நான் தொலைந்ததை
உணர்ந்தேன் இப்பிரிவால்.
தொலைந்த இடம் தெரிந்ததால்
தேடும் மனம் இல்லை என்னிடம்.
நினைவுகளால் உறக்கத்தை
உறங்கச் சொல்ல ஒத்தி வைக்கிறேன்.

No comments:

 
software software