நினைவென்னும் பிழை
மனமென்னும் விஷம்
நிகழ்வென்னும் கொடுமை
அனைத்தும் நிழலாடும் போது
உதிரம் ஓடா உடம்பாக தோன்றுகிறது
சிதை தீயில் விழுந்த
புழுவாக துடிக்கும் உள்ளம்.
பிடித்த நிகழ்வு
நினைவில் நிழலாடி
உறக்கத்திலும் ஒரு கிறக்கம்
கள்ளுண்ட மனம் தன்னை
கடவுள் என நினைக்கும்.
விசித்திரம் கொண்ட உள்ளமெனும் ஊரில்
சுற்றித்திரியும் ஏழை நான்.
Tuesday, May 29, 2012
பிழையான விஷம்.!
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Tuesday, May 29, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment