நினைவென்னும் பிழை
மனமென்னும் விஷம்
நிகழ்வென்னும் கொடுமை
அனைத்தும் நிழலாடும் போது
உதிரம் ஓடா உடம்பாக தோன்றுகிறது
சிதை தீயில் விழுந்த
புழுவாக துடிக்கும் உள்ளம்.
பிடித்த நிகழ்வு
நினைவில் நிழலாடி
உறக்கத்திலும் ஒரு கிறக்கம்
கள்ளுண்ட மனம் தன்னை
கடவுள் என நினைக்கும்.
விசித்திரம் கொண்ட உள்ளமெனும் ஊரில்
சுற்றித்திரியும் ஏழை நான்.
Tuesday, May 29, 2012
பிழையான விஷம்.!
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Tuesday, May 29, 2012
0
பதில் மடல்
Saturday, May 26, 2012
மனப் புழுக்கம்
மனதின் புழுக்கம் பழக்கம் ஆனபின்
வழக்கத்தை மாற்றுவதில் பயனில்லை
இந்த உள்ளே வெளியே விளையாட்டில்
வெளியே உள்ளது உள்ளே தெரியக் கூடாது
உள்ளே உள்ளது வெளியே தெரியக் கூடாது
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Saturday, May 26, 2012
0
பதில் மடல்
மௌனம்
நான் ஆண் நீ பெண் என்பதாலோ
அல்லது
நான் பெண் நீ ஆண் என்பதாலோ
அதன் அடர்ந்த சத்தம் என் காதில் விழுகிறது.!
படைப்பு....
மடல்காரன்_MadalKaran
at
Saturday, May 26, 2012
0
பதில் மடல்
Subscribe to:
Posts (Atom)