Tuesday, February 15, 2011

மாறாக் காதல்.!

உன் முத்தங்கள் மொத்தமும்
என் உள்ளங்கையில் பொத்தி வைத்தேன்
உன் உதடின் கோடுகள் என் கை ரேகையாயின
அதுவே என் வாழ்கையின் ஆருடக் கோடுகளாயின
என் எண்ணத்தில் வண்ணம் சேர்க்க
என்று எண்ணம் கொண்டாய்?
உன் கண்ணத்தில் நாணம்
விண்ணொளியாய் மின்னுகிறது எதனால்?

வானம் பார்த்த பூமியாய் இருந்த என் மனம்
உன்னைப் பார்த்ததும்
வாசல் பார்த்த சாமியாய் நிற்கிறது!

சொல் இல்லா வாக்கியம் பொருள் ஆகாது
நீ இல்லா வாழ்கை இனிக்காது!
மாறன் அம்பினாலும் மறிக்காத காதல்
என்னுடைய மாறாக் காதல்

No comments:

 
software software