Monday, October 11, 2010

வண்ணம் வேண்டிய எண்ணம்

போதிமரம் தேவையில்லை
போதனையும் தேவையில்லை
இப்புவியில் விழுந்துவிட்ட பின்னே
தப்பிக்க அவள்(ன்) தயயை வேண்டும்.

சோதனையும் வேதனையும்
சொத்தென ஆனபின்
பித்துபிடிக்காமல் இருப்பதும்
மேலோன் புண்ணியமே.

சமுதாய காயத்தை
கண நேரம் நினைத்தாலும்
நெஞ்சம் கணக்கிறது

விளை நிலங்கள்
வீடான பின்னாலே
சேற்றில் வளரும்
சோற்றிற்கு எங்கே போகும் இந்தக் கூட்டம்?

போதுமடா சாமி
பொல்லாப்பு வேண்டாம்
வீண் வேஷம் வேண்டாம்
மனித நேயம்தான் வேண்டும்.

அடுத்தவர் புலம்பலை கேட்கும் போது
நம் கதை எத்தனையோ மேலடா
என்று உள்ளம் சொல்லுகிறது.

ஆயிரம்தான் ஆனாலும்
ஆசை விதை முளைப்பதால்
வாழ்கை வாழ்ந்து விடவேண்டியதுதான்.

No comments:

 
software software