Tuesday, June 5, 2012

காதல் என்னும் இமை!

காதலுக்கு கண் இல்லை

அவள் கருப்பா சிவப்பா தெரியவில்லை
அவள் நெட்டையா குட்டையா தெரியவில்லை
அவள் குண்டா ஒல்லியா தெரியவில்லை
அவள் அழகா அசிங்கமா தெரியவில்லை
அவள் நெருங்கிய சொந்தமா, தூரத்து சொந்தமா

தெரியவில்லை..
உண்மைதான் காதலுக்கு கண் இல்லை!

ஆனால் அவனுக்காக அவளும்

அவளுக்காக அவனும்

இறைவனிடம் வேண்டுகிறார்கள்..

காதலுக்கு இமை உண்டு
கண் போன்ற காதலை காப்பதற்கு.!

Monday, June 4, 2012

சோகம்.!

சூழ்நிலையின் தோன்றல்

சொல்லாமல் தரும் வருகை
நில்லாமல் உறிஞ்சும் சுகத்தை
பெருங்கடல் ஆழத்தைவிட ஆழம் கொண்டது
சுழற்றி அடித்து மிரள வைக்கும்

சுருங்க சொன்னால் உரைய வைக்கும்
ஓடி ஒளிந்தாலும் உறங்க விடாது

உண்மை நிலையை உணர விடாது
அழையாமல் நுழையும் சோகம்,
உள்ளத்தின் சுகத்தை உறங்கச் செய்யும்.!

 
software software