Friday, April 24, 2009

உன்னால் என்னை அறிந்தேன்.

மனத்தின் மணம் அறியாமல்
மன மகிழ் மன்றங்களை தேடும் மனம்.

உயிர்களை படைக்க உதவிய இறைவன்
உள்ளத்தை சுருக்கியது ஏனோ?
அல்லது என் கண்கள்தான் சுருங்கினவோ?

பசியினால் வயிற்றை அறிந்தேன்
வலியால் உயிரை அறிந்தேன்
ஒலியால் சொல்லை அறிந்தேன்
உளியால் சிலை அறிந்தேன்
உணர்வால் உள்ளத்தை அறிந்தேன்
உன்னால் என்னை அறிந்தேன்.

 
software software